மணிப்பூருக்கு தீர்வு என்ன? கனிமொழி கேள்வி

by Staff / 17-02-2024 03:53:57pm
மணிப்பூருக்கு தீர்வு என்ன? கனிமொழி கேள்வி

மணிப்பூரில் சமீபத்தில் காவல் நிலையம் சூறையாடப்பட்டு மீண்டும் பெரிய அளவில் வன்முறைகள் அரங்கேற தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள திமுக எம்பி கனிமொழி, மணிப்பூரில் தொடர்ந்துவரும் வன்முறை மிகுந்த கவலையளிக்கிறது. இவை தேசியப் பாதுகாப்பில் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இப்பிரச்சினைக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து சமூகங்களும் சமமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தப்படுவதற்கான உடனடித் தீர்வு எட்டப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via