தங்கை மகன் திருமணத்தில் பங்கேற்காத முதல்வர் ஜெகன்
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் மகன் ஒய்.எஸ்.ராஜா ரெட்டி திருமண விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஷர்மிளாவின் சகோதரரும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கவில்லை. குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் ஒய்.எஸ்.விஜயம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணன், தங்கை பிரிந்து விட்டனர். இதனால் ஆந்திராவில் இருந்து வந்து, தெலங்கானாவில் ஷர்மிளா புதிய கட்சியை தொடங்கினார். தொடர்ந்து, அக்கட்சியை காங்கிரஸில் சமீபத்தில் இணைத்தார்.
Tags :