ஜெயப்பிரதாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் முன்னாள் எம்.பி.யும், திரைப்பட நடிகையுமான ஜெயப்பிரதாவை தப்பியோடிய குற்றவாளி என உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்து, மார்ச் 6ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயப்பிரதாவை கைது செய்ய ராம்பூர் எஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயப்பிரதா பாஜக சார்பில் போட்டியிட்டார். இதனிடையே, அந்த தேர்தலின்போது ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
Tags :