கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். நீண்டகரை கிராமம் பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25ஆம் தேதி மாணவிகள் சஜிதா (13), தர்ஷினி (13) ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுமிகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவரது குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Tags :