மாணவன் தற்கொலையால் அதிர்ச்சி

by Staff / 02-03-2024 03:20:05pm
மாணவன் தற்கொலையால் அதிர்ச்சி

கோவை கணபதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சந்துரு(16). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். சந்துரு பள்ளிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது பெற்றோர் சந்துருவுக்கு அறிவுரை கூறினர்.இதனால் மன உளைச்சல் அடைந்த சந்துரு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் 
இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via