அமெரிக்காவில் பயங்கரம்

by Staff / 27-03-2023 01:29:14pm
அமெரிக்காவில் பயங்கரம்

வல்லரசு நாடான அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள குருத்வாராவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via