தென் சென்னையில் போட்டியிட மீண்டும் விருப்ப மனு: தமிழச்சி

by Staff / 07-03-2024 02:01:58pm
தென் சென்னையில் போட்டியிட மீண்டும் விருப்ப மனு: தமிழச்சி

திமுக சார்பாக தென்சென்னையில் போட்டியிட தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு வழங்கினார். மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் திமுகவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி, வேலூரில் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிட மனு அளித்துள்ளனர். தென் சென்னையில் அதிமுக சார்பாக ஜெயவர்த்தன், பாஜகவில் குஷ்பு போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via