கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்சுபவர் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று
பேரணாம்பட்டு தாலுக்கா பகுதிகளில் உள்ள சாத்கர் மலைப்பகுதியில் உள்ள லட்சுமி வெடி, நீர்முள்ளி, பன்னிக்குட்டி பள்ளம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்ட குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டன.
Tags : கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.