வேலைக்கு வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்த முதலாளிகள்

by Staff / 08-03-2024 12:22:46pm
வேலைக்கு வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்த முதலாளிகள்

உ.பி கான்பூரில் கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்த செங்கல் சூளைக்கு அருகில் உள்ள வயல்வெளியில் 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணையில், அந்த சிறுமிகள் செங்கல் சூளை ஒப்பந்ததாரர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவரது தந்தையை மிரட்டியதைத் தொடர்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via