குடிநீருக்கு பதில் ஆசிட்
பாகிஸ்தான் லாகூர் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் இக்பால் பூங்கா அருகே "போயெட் ரெஸ்டாரண்ட்" என்ற ஓட்டல் உள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த முஹம்மது ஆதில் என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு அந்த ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர். அதில் ஒரு பாட்டிலை திறந்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் கைகளை அதிலிருந்த தண்ணீரால் கழுவியுள்ளார்.
உடனே அவர் வலி தாங்காமல் கத்த ஆரம்பித்தார். அதன்பின்னர் அவரது கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் உண்டானது. அப்போது தான் அந்த பாட்டில்களில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.மேலும் அந்த பாட்டிலில் இருந்த ஆசிட் தண்ணீரை தெரியாமல் குடித்த அவர்களது இரண்டரை வயது குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்தது. உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு குழந்தை வஜிஹாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :