ஹரியானாவில் பயங்கர சாலை விபத்து

by Staff / 11-03-2024 12:18:48pm
ஹரியானாவில் பயங்கர சாலை விபத்து

ஹரியானா மாநிலம் ரேவாரியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. நேற்று  நள்ளிரவுக்குப் பிறகு ரேவாரி அருகே மசானி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது எக்ஸ்யூவி மோதியது. இதனால், ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் நான்கு பேர் பெண்கள். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via