பட்டாசு கடைக்கு சீல்....
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி-சாத்தூர் சாலை சிவகாமிபுரம் காலனியில் இயங்கி வரும் பட்டாசு கடையில் சிவகாசி கிழக்கு போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் விதிமுறைகளை மீறி ஆபத்தான நிலையில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த கடையில் இருந்த சிவகுரு (60) என்பவரை கைது செய்த போலீசார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
Tags :