ஹோட்டல் உரிமையாளர் ஊழியரால் வெட்டிக் கொலை

by Staff / 14-03-2024 05:31:13pm
ஹோட்டல் உரிமையாளர் ஊழியரால் வெட்டிக் கொலை

ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஹோட்டல் ஊழியர் ஒருவரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம், முஷிராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. மாலிக் சாய் ஹோட்டலின் மேலாளர் கவுஸ் (50), ஹோட்டல் ஊழியர் ஒருவரால் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டார். தகவலின் பேரில் முஷிராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலைக்கான காரணங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via