தர்பூசணி பழங்களில் ரசாயனம் - எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 16-03-2024 12:35:53pm
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில் சுற்றுலா தளங்களில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சீசனுக்கு ஏற்றது போல் மாம்பழம், வாழைப்பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தர்பூசணி பழங்கள் சிவப்பாக இருக்க ரசாயணம் கலந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via