இரட்டை இலை யாருக்கு? - தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் ஆணை

by Staff / 17-03-2024 04:15:32pm
இரட்டை இலை யாருக்கு? - தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் ஆணை

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளிக்கும் புதிய மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, அதிமுக பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தங்களது தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளரான வா. புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சச்சின் ததா முன்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது இம்ரான் அஹமது, ‘‘இந்த பிரச்சினை 2017 முதல் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அதிமுகவின் பெயர், கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னம் போன்றவற்றை பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

 

Tags :

Share via