பெண் குழந்தை விற்பனை காவல்துறை விசாரணை

by Staff / 28-03-2023 02:47:07pm
பெண் குழந்தை விற்பனை காவல்துறை விசாரணை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே நேற்று மூதாட்டி ஒருவர் கையில் பிறந்து இரண்டே நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பது தெரிய வந்தது..அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் தன்னுடைய மகள் அழகு பாண்டிஅம்மாள் என்பவரது குழந்தை என கூறிய மூதாட்டி கூறிய நிலையில் அவரை அவரது மகளை அழைத்து விசாரணை நடத்திய போது மூதாட்டி கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது.இதனையடுத்தாக தாய் மகள் மற்றும் அவருடைய தொடர்பில் உள்ள மற்றொரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை ஆட் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் கடந்த சில நாட்களில் அரசு மருத்துவமனை அல்லாமல் வேறு ஏதும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள்ளதா என்பது குறித்தான விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.குழந்தையை பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகத்துடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தை யாருடைய குழந்தை என்பது குறித்தான விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.மதுரை அரசு மருத்துவமனை அருகே பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via