மதுரையில் ராதிகா சரத்குமார் பேட்டி.

by Staff / 24-03-2024 04:35:41pm
மதுரையில் ராதிகா சரத்குமார் பேட்டி.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அப்போது மதுரை விமான நிலையத்தில் வருகை தந்த பாஜக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்கும் மாலை அணிவித்து குலவை இட்டவாறு ஆரத்தி எடுத்தனர்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக சரத்குமார் ராதிகாவை அறிமுக படுத்தி பேசினார். பாரதியார் ஜனதா கட்சியின் சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம் விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துதல் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து ராதிகா பேசும் போது விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களுக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.விருதுநகர் எனக்கு புதிதல்ல இருந்தாலும் இங்கு வேட்பாளராக மக்களுக்காக நல்லது செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் என் சொந்தங்களுக்கும் நன்றி.

 

Tags :

Share via