தேர்தல் விதியை மீறிய ஓபிஎஸ்

by Staff / 27-03-2024 04:04:26pm
தேர்தல் விதியை மீறிய ஓபிஎஸ்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் எய்த ஓபிஎஸ், இன்று ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் பிரச்சாரம் செய்து வந்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் ஒருவர் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த நபர் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, ஓபிஎஸ் தனது சட்டை பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து அவருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தைக்கு கொடுத்தாரா இல்லை அந்த நபருக்கு கொடுத்தாரா என கேள்வி எழுந்து வருகிறது. வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேட்பாளர்கள் பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றை கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி.

 

Tags :

Share via