கள்ளக்காதலுக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது

by Staff / 30-03-2024 12:12:49pm
கள்ளக்காதலுக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே வில்லூரை சேர்ந்தவர் குருநாதன். இவர் கடந்த வாரம் வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். உடலை கைப்பற்றி இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி மகாலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியனுடன் பழகி வந்ததை தட்டி கேட்டதால், மகாலட்சுமியும் சுப்ரமணியும் சேர்ந்து குருநாதனை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via