தற்போது வரை ரூ. 150 கோடி கடன் - பிரியங்கா காந்தி
மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags :