ஓட்டுக் கேட்டு வந்தவர் மீது சுடு கஞ்சியை ஊற்றிய நபர்

by Staff / 01-04-2024 12:44:26pm
ஓட்டுக் கேட்டு வந்தவர் மீது சுடு கஞ்சியை ஊற்றிய நபர்

திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வீட்டுக்கு வந்த எல்டிஎப் ஆளுங்கட்சி வார்டு உறுப்பினர் உடலில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல் அருகே முடக்கல் பஞ்சாயத்து 19வது வார்டு உறுப்பினர் பிஜு (53) என்பவர் உடலில் தூக்கி சுடு கஞ்சி ஊற்றியதில் காயமடைந்தார். மார்பு மற்றும் வயிற்றில் காயம் அடைந்த பிஜு, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் சஜி (46) என்பவரை அடிங்கல் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via