போலி பணி நியமன ஆணைகளை நம்ப வேண்டாம்: சென்னை பெரு நகர மாநகராட்சி

by Staff / 07-09-2023 12:41:13pm
போலி பணி நியமன ஆணைகளை நம்ப வேண்டாம்: சென்னை பெரு நகர மாநகராட்சி

 போலி பணி நியமன ஆணைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று சென்னை பெரு நகர மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,: சென்னை மாநகராட்சியில் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக போலியான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதாக மாநகராட்சி மேயர் பிரியாவின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த போலி பணி நியமன ஆணைகள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..மாநகராட்சியைப் பொறுத்தவரை பணி நியமனங்கள் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படும். எனவே, இதுபோன்ற போலியான பணி நியமனங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் '. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via