பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்  தீவிர தேர்தல் பிராச்சாரம்.

by Editor / 01-04-2024 11:47:12pm
 பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்  தீவிர தேர்தல் பிராச்சாரம்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் பேசியதாவது: நடைபெற இருக்கிற தேர்தல் இதுவரைக்கும் நடந்த தேர்தலை விட  வித்தியாசமான தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தை அழிக்கக்கூடிய முயற்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள் ஜந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் இல்லாமல்  ஆக்கிவிட்டார் கனிமவளங்கள் கேரளாவிற்க்கு  கடத்தபடுகின்றது, இதை எல்லாம் தடுத்த நிறுத்தி புதிய திட்டங்கள் கொண்டு வருவதறக்கு நீங்கள் தாமரை சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என நாகர்கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பொதுமக்களிடையே திறந்த ஜிப்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது   அதே பகுதிக்கு அதிமுக வேட்பாளர் நாசரேத் பசலியானுக்கு தேர்தல் பரப்புரை  செய்ய வந்த நடிகை காயத்ரி ரகுராமனை  வாகனத்தில் இருந்து கையை அசைத்து நலம் விசாரித்த பொன் ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாகனத்தை கட்சி நிர்வாகிகளிடம் கூறி அந்தப்பகுதியில் இருந்த நாகரீகத்தோடு  அப்புறப்படுத்த சொல்லி புறப்பட்டு சென்றார்.முன்னதாக ஓருவொருக்கொருவர் வாகனத்தில் இருந்தபடியே நலம் விசாரித்தனர்.

 

Tags : பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்  தீவிர தேர்தல் பிராச்சாரம்.

Share via