பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

by Staff / 05-04-2024 12:00:15pm
பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரத்தில் ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தது சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (50) என்பவரது மனைவி வரலட்சுமி (45), மகன் யுவராஜ் (16), மகள் ஜனனி (15) என்பது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக கணவர் விட்டுச் சென்ற நிலையில் மனைவி, பிள்ளைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 

Tags :

Share via