கள் விற்ற 2 பெண்கள் கைது

by Staff / 08-04-2024 12:09:49pm
கள் விற்ற 2 பெண்கள் கைது

மதுரை மாவட்டம் பேரையூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்ற போது சிலர் கள் விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதே ஊரைச் சேர்நந்த செல்வி 25), பார்வதி (45) இரண்டு பேரும் விற்பனை செய்வதற்காக பானைகளில் கள் வைத்திருந்தனர்கள்.இதனை கண்ட போலீசார்  50 லிட்டர்  கள் வைத்திருந்த பானையுடன் பறிமுதல் செய்து 2 பெண்களையும் கைது செய்தனர். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடந்து வருகிறது.

 

Tags :

Share via