இளைஞர் கொலை.. இன்ஸ்டா ஸ்டோரி.. பகீர் சம்பவம்

by Staff / 08-04-2024 05:36:01pm
இளைஞர் கொலை.. இன்ஸ்டா ஸ்டோரி.. பகீர் சம்பவம்

தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள புச்சிபள்ளி பகுதி பிரகதி நகரை சேர்ந்தவர் தேஜஸ்(26). கொலை வழக்கில் கைதாகி பின் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரது வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் அவரை இழுத்து சென்று ஒரு குளத்தின் அருகே 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கொலையாளிகளில் 2 பேர் ரத்தக்கறை படிந்த கை, ஆயுதங்களை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்துஉடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via