பெற்றோரின் பிரிவை தாங்க முடியாமல் மகள் தற்கொலை

by Staff / 12-04-2024 03:23:24pm
பெற்றோரின் பிரிவை தாங்க முடியாமல் மகள் தற்கொலை

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்க முடியாததால் விரக்தியில் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. நல்கொண்டா, மசினப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாகிலா சைதுலு. இவர் தனது மனைவி சந்தியாவை கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது மகள் யோகிதா (22) தனது பெற்றோரை மீண்டும் சேர்த்து வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்காததால், மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via