மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த கனிமொழி.

by Editor / 25-12-2023 05:32:03pm
மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த கனிமொழி.

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளை திமுக துணைப்பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களைச் சந்தித்து அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை அனைத்தும் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த கனிமொழி.

Share via