மாற்று எரிபொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல்

by Staff / 21-04-2024 02:46:57pm
மாற்று எரிபொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல்

விழுப்புரம் அருகே வேடம்பட்டு, மாற்று எரிபொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதால், வாந்தி, குமட்டல் ஏற்பட்டு 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தொழிற்சாலையை  மூடக்கோரி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். தொழிற்சாலையிலிருந்து  வெளியேறும் துர்நாற்றத்தால் கடும் பாதிப்பு  ஏற்படுவதாக  கிராம மக்கள்  குற்றம்சாட்டி  வந்த  நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையிலிருந்து காலாவதியான மருந்து, பழைய பேப்பர்களை கொண்டு எரிபொருள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via