தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகரிப்பு - இபிஎஸ்
தமிழகத்தில் லாக் அப் டெத் எனப்படும் காவல்துறை விசாரணை மரணங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X பதிவில், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :