கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளஞ்சீறார்கள் கைது.

by Editor / 20-01-2023 08:55:03pm
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளஞ்சீறார்கள் கைது.

திருநெல்வேலிமாவட்டம் திசையன்விளை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  செல்வமருதூரை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மகன் ராஜேந்திரன்(22) என்பவர் காணாமல் போனதாக அவரது அம்மா சுமதி என்பவர் 09.10.2022-ம் தேதி  திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வந்தனர். 

இந்நிலையில்  20.01.2023-ம் தேதி இன்று திசையன்விளை கிராம நிர்வாக அலுவலரிடம் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளஞ்சீறார்கள் ஆஜராகி, மேற்படி காணாமல் போன ராஜேந்திரனை  கொலை செய்து அரசூர் பகுதியில் புதைத்துள்ளோம் என கூறி சரணடைந்துள்ளனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மூன்று இளஞ்சிறார்களையும் திசையன்விளை காவல்நிலையத்தில் ஆஜர் செய்துள்ளார்.. 

இதன் தொடர்ச்சியாக  காவல்துறையினர் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட  இராஜேந்திரன், இளஞ்சிறார்  ஒருவரின் உறவினர் பெண்ணை ஆபாசமாக செல்போனில்  போட்டோ எடுத்து வைத்துள்ளதாகவும்,அதனை தட்டி கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை அரசூர் பகுதியில் புதைத்துள்ளதாக  தெரியவந்துள்ளது. பின்னர்  மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று இளஞ்சிறார்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via