மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை

by Staff / 12-04-2024 03:26:27pm
மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது உறவினர் மணி என்பவற்றின் மகளை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. ஆனாலும் இருவரும் காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் இணைந்து கார்த்திக்கை வழிமறைத்து சரமாரியாக குத்தியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்ட போலீசார் மணி மற்றும் தினேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via