ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் ஏப்ரல் 17 முதல் 19 வரை 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 16) ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடி என ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு விற்பனை ஆனது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகம்.
Tags :