“அரசியலை விட்டு விலகுகிறேன்” - அண்ணாமலை அதிரடி

by Staff / 19-04-2024 11:49:00am
“அரசியலை விட்டு விலகுகிறேன்” - அண்ணாமலை அதிரடி

தேர்தலில் வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம், கோவையில் Gpay மூலமாக பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலை நான் நேர்மையாக சந்தித்து இருக்கிறேன். கோவை தொகுதியில் உள்ள ஒரு வாக்காளர் நான் பணம் கொடுத்தேன் என நிரூபித்தால் அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன். தர்மத்திற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன். திமுகவிற்கு எதிராக கேள்வி  நடத்தி வருகிறேன்” என்றார்.

 

Tags :

Share via