முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை

by Staff / 12-02-2024 11:53:55am
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது..

கடந்தாண்டு ஜுன் 16ஆம் தேதி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 9ஆம் தேதி நிறைவடைந்தது.

இந் நிலையில் கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via