த்ரிஷா விவகாரம்: முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு

by Staff / 23-11-2023 12:24:22pm
த்ரிஷா விவகாரம்: முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு ஆஜராக அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Tags :

Share via