ஆன்லைனில் யானைத்தந்தம் விற்பனை... கன்னியாகுமரியில் 3 பேர் கைது...

by Admin / 08-08-2021 12:29:23pm
ஆன்லைனில் யானைத்தந்தம் விற்பனை...  கன்னியாகுமரியில் 3 பேர் கைது...

 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே  காட்டு விலங்குகளின் உறுப்புகளால் ஆன பொருட்களை ஆன்லைனில் விற்ற மூவரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ் டவுனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கேரளாவிற்கு ஆன்லைன் மூலமாக யானைத் தந்தத்தால் ஆன பொருட்கள், மான்கொம்பு, ஆமை ஓடு மற்றும் பழங்கால அரிவாள் போன்ற பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த கேரள வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இதனைதொடர்ந்து அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுனுக்கு வந்த கேரள வனத்துறையினர் தமிழக வனத்துறையினரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட வீட்டை சோதனை செய்தனர்.

இதில் பல்வேறு முக்கிய பொருட்கள் கிடைத்த நிலையில் இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ராஜாகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த மூவரை கேரள வனத்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via