மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம்...

by Admin / 08-08-2021 12:16:24pm
மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம்...

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக கோடம்பாக்கத்தில் இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து போரூர் சந்திப்பு வரை, ஆற்காடு சாலை வழியாக 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியது.இதனால் இன்றும் நாளையும் அப்பகுதியில் காலை 8 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
குறிப்பாக போரூர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள், வழக்கம்போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து சாலிகிராமம் போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள், ஆற்காடு சாலையில் பவர் அவுஸ் சந்திப்பில் இடது புறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக் நகர் 2-வது அவென்யூ, பி.
 
டி. ராஜன் சாலை, ராஜ மன்னார்சாலை, 80 அடி சாலை ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.
 கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்லவேண்டிய வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக் நகர் இரண்டாவது அவென்யூ, ஜவர்கலால் நேரு 100 அடி சாலை வழியாக செல்லலாம்.போரூர் மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலது புறம் திரும்ப அனுமதி இல்லை.

அதற்கு மாற்றாக ஆற்காடு சாலையில் நேராக சென்று, வடபழனி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பி.டி. ராஜன் சாலை வழியாக கே.கே. நகர் செல்லலாம்.கே.கே. நகரில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலையில் திரும்ப அனுமதி இல்லை. அதற்கு மாறாக இடது புறம் திரும்பி 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலையை அடையலாம் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via