இளம்பெண் குத்திக்கொலை.. முன்னாள் காதலன் குற்றவாளி

by Staff / 10-05-2024 12:49:01pm
இளம்பெண் குத்திக்கொலை.. முன்னாள் காதலன் குற்றவாளி

கேரளாவின் கண்ணூர் அருகே பானூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷியாம்ஜித் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தலச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றவாளியின் தண்டனை விவரத்தை நீதிமன்றம் வருகிற 13ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. பெண்ணின் முன்னாள் காதலனான ஷியாம்ஜித் என்பவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.விஷ்ணுபிரியா அக்டோபர் 22, 2022 அன்று கொல்லப்பட்டார். ஷியாம்ஜித் தனது பையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, விஷ்ணுபிரியாவின் படுக்கையறைக்குள் புகுந்து கழுத்து மற்றும் கைகளை வெட்டி கொன்றார். அப்போது அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். காதலித்துவிட்டு, தன்னை மறந்ததாலேயே கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு சைக்கோ கொலையாளி தொடர்பான மலையாளப் படத்தை பார்த்தே கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.
 

 

Tags :

Share via