16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, மெட்ரோ ரயிலில் ஒரு நபர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். X (Twitter) இல் அந்த 16 வயது சிறுவன் அது தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த நபர் தனது அந்தரங்க உறுப்புகளை தொட முயன்றதாகவும், வேறு மெட்ரோ ரயிலுக்கு மாறும்போது அந்த நபர் சிறுவனை தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜிதேந்தர் கவுதம் (28) என்ற நபரை கைது செய்துள்ளனர்.
Tags :