திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணி-12ந் தேதி தொடக்கம்
பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குகின்றன.
திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட இந்து அறநிலையத்துறையிடமிருந்து 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதற்காக 2019 பிப்ரவரி 10-ந் தேதி திருப்பூர் வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் 2 ஆண்டாகியும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.
இந்தநிலையில் வருகிற 12-ந் தேதி மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க., தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல் கூறுகையில்:
‘மத்திய இணை அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ஆகியோரை சந்தித்து இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவது குறித்து முறையிட்டோம். அதன்படி வருகிற 12-ந்தேதி கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது என்றார்.
Tags :