செப்.,21 வரை தமிழக சட்டசபை; ஆக.,14ல் வேளாண் பட்ஜெட்

by Admin / 10-08-2021 03:06:46pm
செப்.,21 வரை தமிழக சட்டசபை; ஆக.,14ல் வேளாண் பட்ஜெட்

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் எனவும், ஆக.,13ல் பொது பட்ஜெட்டும், 14ல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் வரும் 13ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

 கூட்டத்தில் ஆக.,13ம் தேதி முதல் செப்.,21ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து இருக்கைகள் முன்பும் கணினி பொருத்தப்பட்டுள்ளது.

 வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு அனுமதியளித்ததை அடுத்து, வரும் 14ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். 16ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Tags :

Share via