இன்று சுதந்திர தினம்: நிகழ்ச்சி விவரங்கள் !

by Editor / 14-08-2021 08:11:36pm
இன்று சுதந்திர தினம்: நிகழ்ச்சி விவரங்கள் !

நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிச் சிறப்புரையாற்றுவார்.
பிரதமர் மோடி கொரோனா, தேசப்பற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கொடியேற்றிய பிறகு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இந்திய சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக, பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றியவுடன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு Mi-17 1V ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மலர் தூவும் நிகழ்வுக்கு பிறகே பிரதமர் மோடி சிறப்புரையாற்றுவார். பின்னர் தேசிய கீதம் பாடப்படும்.75வது சதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சொப்ரா மற்றும் இந்தியாவிலிருந்து இதுவரையில் ஒலிம்பிக் வென்ற 32 விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணுக்குத் தெரியாத எதிரி, கோவிட் -19 உடன் போராடுவதில் முக்கிய பங்கு வகித்த கொரோனா வீரர்களைக் கவுரவிக்க, ராம்பார்ட்டின் தெற்குப் பகுதியில் ஒரு தனித் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via