ஒரே இடத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகள் - தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்.. சிசிடிவி காட்சியால் பரபரப்பு

by Admin / 20-08-2021 01:00:36pm
ஒரே இடத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகள் - தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்.. சிசிடிவி காட்சியால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

வேடசந்தூர் வாணிகரையைச் சேர்ந்த  மாயக்கண்ணன் மற்றும் அவரது அண்ணன் மகளான ஷாலினி இருவரும், திண்டுக்கல் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூர் காக்கா தோப்பு பிரிவு சாலையில் இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு, இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via