இளைஞரை சுற்றி நின்று அறையும் இளம் பெண்கள்..! என்ன செய்தார்? ஏன் இந்த வெறித்தனமான தாக்குதல்?

by Admin / 21-08-2021 02:00:20pm
இளைஞரை சுற்றி நின்று அறையும் இளம் பெண்கள்..! என்ன செய்தார்? ஏன் இந்த வெறித்தனமான தாக்குதல்?

காரைக்குடியில் ஒரு நபரை, பெண்கள் வளைத்து வளைத்து கண்ணத்தில் அறைந்த காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன ஒரு தைரியம் இந்தப் பெண்களுக்கு ஒரு ஆண்-ஐ இப்படி செய்வது சரியா? என இங்கு பலருக்கும் ரத்த நாளங்கள் துடிக்கும். ஆனால் அந்த இளைஞர் என்ன செய்தார்? ஏன் இந்த பெண்கள் அவரை இப்படி தாக்கினர் என்பது குறித்து பார்ப்போம்...

கும்பகோணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ராஜா என்பவர் மீது மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகார் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புகாரில், தனக்கும், காரைக்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறியிருக்கிறார். கும்பகோணத்தில் பெற்றோருடன் வசித்து வரும் அந்த இளம் பெண், உணவகம் ஒன்றில், காசாளராகவும், ’வெல்கம் கேர்ள்ஸ்’-ஆகவும் பணியாற்றி வந்துள்ளார். அந்த வகையில், கடந்த 2020 ஜனவரியில் புதுவயலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராக பணியாற்றியதாகவும், அங்கு தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராஜா மற்றும் அவர் மூலம் சாக்கோட்டை காவல்நிலைய எழுத்தாளர் மாயவதன் ஆகியோரை சந்தித்ததாகவும், அதில் ராஜா, இதுபோன்று நிகழ்ச்சிகளுக்கு வெல்கம் கேர்ள்ஸ் தேவை எனக் கூறி தனது செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
 
அடுத்த 2 நாட்களுக்கு பிறகு என்னை தொடர்பு கொண்ட ராஜா, ‘‘பெரிய வி.ஐ.பி.கள் எல்லாம் இருக்காங்க, எங்களுடன் ஒரு அக்ரிமென்ட் போட்டு 1 அல்லது 2 மாதம் தங்கினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்'' என கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக புகாரில் தெரிவித்திருக்கிறார். அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் சாக்கோட்டை காவல் நிலைய எழுத்தர் மாயவதன் தன்னை தொடர்பு கொண்டு, ராஜா புகார் கொடுத்திருப்பதால், நேரில் ஆஜராகும் படியும், அடிக்கடி போன் செய்து தகாத முறாஇயில் பேசி, மிரட்டியதாகவும் கூறியிருக்கிறார். முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு அளித்த புகாரின் பேரில் சாக்கோட்டை காவல்நிலையத்தில், புகார் அளித்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் யார் அந்த ராஜா என்ற விசாரணையும் நடைபெற்றது.

விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) விஸ்வநாதன் என்பதும், இவர் அறந்தாங்கி, திருச்சி ஆகிய இடங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடும் செய்யும் நபராக இருந்து வருவதும் தெரியவந்தது. அதேபோல, ராஜா இவ்வாறு வெல்கம் கேர்ள்ஸ்-ஆக பணிபுரியும் பெண்களை மது குடிக்க வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து, தனது ஆசைக்கோ, பாலியல் தொழிலுக்கோ இணங்க வில்லை என்றால், அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி புகார் அளித்த பெண்ணிடம் இருந்து ரூ.50,000 வரை பணம் தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ராஜா முயன்றதாக கூறப்படுகிறது.

கும்பகோணத்தை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில், சாக்கோட்டை காவல்துறையினர்,  ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையில், ராஜாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், அவரை ஏமாற்றி திருமண நிகழ்ச்சி இருப்பதாக கூறி காரைக்குடிக்கு ராஜாவை வரவழைத்து சரமாரியாக கண்ணத்தில் அறைந்து தாக்கினர். என்னை ஏண்டா இப்படி செய்தே? நான் நல்லாதானே இருந்தேன்? ஏண்டா தப்போ வீடியோ எடுத்த? என கண்ணீர் விட்டு அழுதப்படியே பெண்கள் அவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via