6 மாதத்திற்கு அப்பறம் திமுகவின் நிறை குறைகளை கூறுவோம்-விஜய பிரபாகரன்

by Editor / 25-08-2021 02:53:26pm
6 மாதத்திற்கு அப்பறம் திமுகவின் நிறை குறைகளை கூறுவோம்-விஜய பிரபாகரன்

கொரோனா காலத்தில் திமுக அரசின் செயல்பாடு நன்றாக இருந்தது என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், விஜயகாந்த் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார்.

விஜயகாந்த் நீடுழி வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தேமுதிகவிற்கு தோல்வி ஏற்பட்டிருந்தாலும் விஜயகாந்துக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். என் தந்தையை நான் தெய்வமாக வணங்குகிறேன் என்றார். விஜயகாந்த் ஏற்கனவே கூறியபடி , புதிய அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறோம். அதன் பிறகு நிறை குறையை கூறுவோம். கொரோனா காலத்தில் திமுக அரசு நன்றாக செயல்பட்டிருக்கிறது என்று கூறினார்.

 

Tags :

Share via