தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 30-06-2022 02:04:55pm
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via