ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி-அன்புமணி குற்றச்சாட்டு

by Staff / 08-11-2023 01:52:49pm
ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி-அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை அருகே 21 ஏக்கர் ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் உள்ள வேளாண் பயன்பாட்டுக்கான, சித்தேரியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யும் முயற்சியில் தனியார் நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்ட ஏரியை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க வருவாய்த்துறை அதிகாரிகளும் துணைபோவது கண்டிக்கத்தக்கது.

 

Tags :

Share via