திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு மீண்டும் கருணாநிதி பெயர்- அமைச்சர் பொன்முடி தகவல்
திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு கருணாநிதியின் பெயர் முதலில் சூட்டப்பட்டு இருந்தது. உயிருடன் இருப்பவரின் பெயரை வைக்கக்கூடாது என்ற காரணத்தால் கருணாநிதியின் பெயர் இடையில் நீக்கப்பட்டு இருந்தது.
தமிழக சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க. உறுப்பினர் சரவணன் பேசினார்.
அப்போது அவர் திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர் அந்த பெயர் நீக்கப்பட்டு விட்டது.
எனவே மீண்டும் கருணாநிதியின் பெயரை அந்த அரசு கலை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு கருணாநிதியின் பெயர் முதலில் சூட்டப்பட்டு இருந்தது. உயிருடன் இருப்பவரின் பெயரை வைக்கக்கூடாது என்ற காரணத்தால் கருணாநிதியின் பெயர் இடையில் நீக்கப்பட்டு இருந்தது.
தற்போது மீண்டும் கருணாநிதியின் பெயரே திருவண்ணாமலை அரசு கலைகல்லூரிக்கு சூட்டப்படும் என்பதை முதல்-அமைச்சரின் அனுமதியோடு இந்த சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை கலை கல்லூரிக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Tags :