கல்லூரி மாணவி கற்பழித்து கொலை

by Editor / 16-11-2022 08:00:27am
கல்லூரி மாணவி கற்பழித்து கொலை

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை கவனித்த ராஜா கௌதம் என்ற 25 வயது இளைஞர், திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் ஊக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு அந்த மாணவியை முரட்டுத்தனமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இளைஞரின் இந்த மோசமான செயலால் மாணவியின் அந்தரங்க பகுதியில் இருந்து ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலையில், வீட்டில் மயங்கி கிடந்த மாணவி அதிக ரத்தப்போக்கினால் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மாணவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார்  இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாகவுதம் என்கிற அந்தநபரை  கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via